இலங்கை

கஜமுத்துவுடன் கைதான இருவர்

கொழும்பு – கொம்பெனித் தெரு ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை மத்திய கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 170 கிராம் கஜமுத்துவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட கஜமுத்துவுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொம்பெனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 31 மற்றும் 27 வயதுடைய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பெனித் தெரு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…