இலங்கை

காத்தான்குடி பகுதியில் தீ விபத்து

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று 31ஆம் திகதி நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…