இந்தியா

4 மாநிலங்களில் ஒரே நாளில் 7 பேர் பலி

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 03 ஆம் திகதி கொரோனாவுக்கு 4,026 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று (04) அது மேலும் உயர்ந்து இருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4,302 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

நேற்று 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த 7 பேரில் மகாராஷ்டிர மாநிலத்தில் 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

இதுவரை மொத்த இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பரவல் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அங்கு 1,373 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். குஜராத்தில் நேற்று 461 பேரும், டெல்லியில் 457 பேரும் சிகிச்சையில் இருந்தனர். தமிழ்நாட்டில் 216 பேரும், புதுச்சேரியில் 22 பேரும் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…