சினிமா

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – ஸ்தலத்திலேயே தந்தை பலி

தருமபுரி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் மலையாள நடிகரின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஷன் டாம் சாக்கோ. இவர், கேரளாவை இருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

தருமபுரியின் பாலக்கோடை அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லொறி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் டாம் சாக்கோ அண்மையில் போதைப் பொருளை பயன்படுத்தி, நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்?

தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது…