இலங்கை

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் குறித்து இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் சிவில் சமூகத்தில் இராணுவத்தை அவதூறு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் மோசடியான ஆவணங்கள் மூலம் தனிப்பட்ட காரணங்களுக்காக பல அதிகாரிகள் இராணுவத்திலிருந்து நீக்கப்படுவதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அந்த அறிக்கையில் ​மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…