இலங்கை

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் குறித்து இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் சிவில் சமூகத்தில் இராணுவத்தை அவதூறு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் மோசடியான ஆவணங்கள் மூலம் தனிப்பட்ட காரணங்களுக்காக பல அதிகாரிகள் இராணுவத்திலிருந்து நீக்கப்படுவதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அந்த அறிக்கையில் ​மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…