கனடா

கனடாவிற்குள் ஊடுறுவியுள்ள ஈரானியர்கள்

கனடாவிற்குள் சில சர்ச்சைக்குரிய ஈரானிய பிரஜைகள் ஊடுறுவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஈரானிய பிரஜைகள் ஊடுறுவியமை தொடர்பாக கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் Canada Border Services Agency (CBSA) தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், மூன்று சந்தேகத்துக்குரியவர்களுக்கு நாடு கடத்தும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கனடாவிற்குள் ஊடுறுவியுள்ள ஈரானியர்கள் | Iranian Officials Allowed Into Canada

ஈரானிய பிரஜைகள் அனைவரும் கனடாவுக்கு வருவதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், அவர்களது விண்ணப்பங்கள் கனடிய குடியேற்ற, அகதிகள் மற்றும் குடிமக்கள் அமைச்சகம் (IRCC) மூலமாக கவனமாக பரிசீலிக்கப்படுகின்றன,” என தெரிவிக்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு, கனடா அரசாங்கம் ஈரான் அரசை ஒரு பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் ஆட்சி என வகைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…