இலங்கை

ஏடிஎம் இயந்திரத்தை தாக்கிய இளைஞன்!

அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, முறைப்பாட்டாளர் தரப்பான வங்கிக்கு  224,750 ரூபாயை  செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

கொழும்பில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,  அவர், போதைப்பொருள் உட்கொண்ட பின்னர் அரச வங்கி ஏடிஎம் இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.   

கொழும்பில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அவர் கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு நகர சபைக்கு அண்மையிலுள்ள வங்கிக் கிளையின் மேலாளர் அளித்த புகாரை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…