இலங்கை

ஏடிஎம் இயந்திரத்தை தாக்கிய இளைஞன்!

அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, முறைப்பாட்டாளர் தரப்பான வங்கிக்கு  224,750 ரூபாயை  செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

கொழும்பில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,  அவர், போதைப்பொருள் உட்கொண்ட பின்னர் அரச வங்கி ஏடிஎம் இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.   

கொழும்பில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அவர் கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு நகர சபைக்கு அண்மையிலுள்ள வங்கிக் கிளையின் மேலாளர் அளித்த புகாரை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…