இலங்கை

திருகோணமலையில் மரணத்தில் முடிந்த விருந்துபசாரம்

திருகோணமலை வடக்கு கடற்கரை வீதியில் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இறந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…