இலங்கை

பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

பௌத்த விவகாரங்களுக்கான பதில் ஆணையாளர் நாயகமாக அந்த திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றி வந்த கசுன் வெல்லஹேவா நியமிக்கப்பட்டுள்ளார். 

பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் பிரேமசிறி ரத்நாயக்க நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

தனது கடமைகளை முறையாகச் செய்யாத குற்றச்சாட்டின் பேரில் பிரேமசிறி ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை முடிவு செய்திருந்தது. 

பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய பிரேமசிறி ரத்நாயக்க தனது கடமைகளை முறையாகச் செய்யாததற்காக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. 

குறித்த குற்றப்பத்திரிகை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதன்போது அவரை பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை முடிவு செய்ததாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…