இலங்கை

ஈஸி கேஷ் முறையில் ஹெரோயினை விநியோகித்தவர் சிக்கினார்

டுபாயில் தலைமறைவாகி, ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவில் இணைக்கப்பட்ட புலனாய்வு அதிகாரிகளின் இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டார். 

களுத்துறை, மத்துகம, பாணந்துறை, பயாகல, பேருவளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி அவர் மொத்தமாக ஹெரோயினை விநியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி ஆகியவை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர் இன்று (10) களுத்துறை நீதவானிடம் அஜர்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…