இலங்கை

தேர்தல் – வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பம்

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை
25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மொத்தம் 2,900 குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன, அவற்றில் 2,260 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவை.

எவ்வாறாயினும், இந்தமுறை சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…