இலங்கை

திக்வெல்ல கடலில் நீராட சென்ற மூவரில் ஒருவர் பலி

திக்வெல்ல கடலில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 

இந்த அனர்த்தம் இன்று (06) பிற்பகல் 3.30 மணியளவில் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நீரில் அடித்து செல்லப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு பிரதேச மக்கள் முயற்சித்துள்ள நிலையில், இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு பேரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவத்தில் உயிரிழந்தவர் மதவியங்கொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன், 51 மற்றும் 38 வயதுடைய இருவரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…