இலங்கை

பேருவலையில் இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையே மோதல்!

பேருவலை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து நேற்று (05) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

அளுத்கம பாதாகொட வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட மற்றைய பாடசாலை மாணவர்களே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக, அப் பாடசாலையின் ஆசிரியை ஒருவரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த தாக்குதலுடன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய வெளிநபர்களும் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவரின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…