இலங்கை

கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து!

கொழும்பு -கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தானது இன்று 18 ஆம் திகதி  காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கியிலுள்ள  குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று தீயணைப்பு  வாகனங்கள் தற்போது தீயணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…