இலங்கை

தற்போதைய அரசின் செயற்பாடுகள் மீது கடும் விமர்சனம் – சாகர காரியவசம் குற்றச்சாட்டு

“நிதி மோசடிகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஒட்டுமொத்தமாகக் கலைந்து வீட்டுக்குச் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசு பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த அரசு மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது.

அரசின் முறையற்ற நிர்வாகத்தால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். விரைவில் இந்த அரசு பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்.

மக்களின் பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் பலமான முறையில் ஆட்சியமைப்பது உறுதி  என  சுட்டிக்காட்டியுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…