விளையாட்டு

துனித் வெல்லாலகேவுக்கு ஆறுதல் கூறிய சூர்யகுமார்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் ஆறுதல் கூறிய வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே அண்மையில் காலமானார். 

நடைபெற்று வரும் ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்தவுடன் அணி நிர்வாகத்தினால் துனித்தின் தந்தை மரணித்த செய்தி அறிவிக்கப்பட்டது. 

அதனை அடுத்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கொழும்புக்கு திரும்பினார். 

பின்னர் மறுநாளே மீண்டும் ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்தார். 

இந்நிலையில் நேற்றைய இந்திய அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததன் பின்னர் துனித்தை சந்தித்த சூர்யகுமார் யாதவ், துனித்தின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். 

அத்துடன் துனித் வெல்லாலகேவின் தோளிலில் தட்டி அவருக்கு ஆறுதல் கூறும் காட்சி அனைவரையும் நெகிழ வைக்கின்றது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…