விளையாட்டு

துனித் வெல்லாலகேவுக்கு ஆறுதல் கூறிய சூர்யகுமார்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் ஆறுதல் கூறிய வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே அண்மையில் காலமானார். 

நடைபெற்று வரும் ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்தவுடன் அணி நிர்வாகத்தினால் துனித்தின் தந்தை மரணித்த செய்தி அறிவிக்கப்பட்டது. 

அதனை அடுத்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கொழும்புக்கு திரும்பினார். 

பின்னர் மறுநாளே மீண்டும் ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்தார். 

இந்நிலையில் நேற்றைய இந்திய அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததன் பின்னர் துனித்தை சந்தித்த சூர்யகுமார் யாதவ், துனித்தின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். 

அத்துடன் துனித் வெல்லாலகேவின் தோளிலில் தட்டி அவருக்கு ஆறுதல் கூறும் காட்சி அனைவரையும் நெகிழ வைக்கின்றது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…