No products in the cart.
அமெரிக்காவின் அவசர எச்சரிக்கை ; பொதுமக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம்?
காசாவில் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மத்தியஸ்தர்களால் எட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.















