இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமபோஷ கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சமபோஷ என்ற மதுசங்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘வெல்லே சாரங்கா’ என்ற கமகே சாரங்கா பிரதீப்பின் நெருங்கிய கூட்டாளி என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

கிராண்ட்பாஸ் பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் ஐந்து கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…