இலங்கை

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் நாளை (21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இம்முகாம் பெரிய கரிசல் பள்ளிவாசலில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

வழக்கமாக புதிய நீர் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அலுவலகத்திற்கு பலமுறை செல்லவேண்டியிருப்பதோடு, விண்ணப்பித்தல், கள ஆய்வு மற்றும் மதிப்பீட்டுத் தொகையைச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு அதிக நாட்களும் தேவைப்படுகின்றன. 

பொதுமக்களின் இத்தகைய சிரமங்களைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், விண்ணப்பம் கோருதல் முதல் கட்டணம் செலுத்துதல் வரையிலான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேவையற்ற அலைச்சல்கள் இன்றி புதிய நீர் இணைப்புக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…