No products in the cart.
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி (20) பாகிஸ்தான் – ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ளது.
சிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியை தசுன் சானக்க வழிநடத்துகிறார்.
அதேநேரம் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என்றும் கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















