இலங்கை

மதுரை மீனாட்சியம்மனை தரிசித்த முன்னாள் ஜனாதிபதி!

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசிப்பை (22) மேற்கொண்டுள்ளனர். 

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. 

அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டதை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். 

எனினும் இந்திய ஊடகங்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும் ஊடகங்களுக்கு எவ்வித பதிலும் கூறாது அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…