இலங்கை

பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி

ஐ.நா. பரு​வநிலை தொடர்​பான உச்சி மாநாடு பிரேசிலில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானது. 

இதில், பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடு​களுக்கு கூடு​தல் நிதி வழங்குவதற்கான ஒப்​பந்​தம் அமை​தி​யான முறை​யில் மேற்கொள்​ளப்​பட்​டது. 

ஆனால், இந்த ஒப்​பந்​தத்​தில் புதை படிவ எரிபொருட்​களை படிப்படி​யாக குறைப்பதற்​கான அல்​லது போது​மான அளவு கார்பன் உமிழ்வு குறைப்பு திட்​டங்​களை வலுப்​படுத்​து​வதற்​கான வெளிப்​படை​யான வரைவு திட்​டம் எது​வும் இடம்​பெற​வில்​லை என தெரிவிக்கப்படுகிறது. 

புதை படிவ எரிபொருட்​களில் இருந்து வில​கிச் செல்​வதற்​கான திட்​டங்​கள் குறித்து அறி​விப்​பு வெளி​யிடப்​ப​டாதது சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. 

சிஓபி 30 தலை​வர் கூறுகை​யில், “பெலேமில் தொடங்​கப்​பட்ட விவாதங்​கள் அடுத்த வரு​டாந்​திர மாநாடு வரை பிரேசிலின் தலை​மை​யில் தொடரும். 

புதை படிவ எரிபொருள் மாற்​றுத் திட்​டம் நாங்​கள் இப்​போது அங்​கீகரித்த உரை​யில் இடம்​பெற​விட்​டாலும் பின்​னர் எனது குழு​வால் வெளியிடப்​படும் ஒரு தனித்​திட்​டத்​தில் அது இடம்​பெறும்​” என்றார்​.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…