இலங்கை

ஹரினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (06) காலை நீதிமன்றத்தில் முன்னிலையானார். 

இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதுளை நீதவான் உதித் குணதிலக்க, குறித்த வழக்கை மே மாதம் 5 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார். 

பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவிருந்த தினத்தில் பகல் வேளையில் பதுளை நகரில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் ஊர்வலமாகச் சென்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போது கைது செய்யப்பட்ட ஹரின் பெர்னாண்டோ, அன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…