இலங்கை

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. 

அதற்கமைய, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,461 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

இதேவேளை, உலக தங்க விலைக்கு இணையாக உள்நாட்டு தங்க விலையும் 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. 

அதன்படி, இன்று முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி இது 327,500 ரூபாவாகக் காணப்பட்டது. 

இதேவேளை, ஜனவரி 1 ஆம் திகதி 354,000 ரூபாவாக காணப்பட்ட “24 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றாகும் போது 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…