இலங்கை

பிரதமர் ஹரிணி – IMF தலைவர் இடையே முக்கிய சந்திப்பு

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…