இலங்கை

கொழும்பு நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

வரவிருக்கும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாளை (7) முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை போட்டி நடைபெறும் காலப்பகுதியில், மாளிகாவத்தை ஆர். பிரேமதாச விளையாட்டரங்கம் மற்றும் கறுவாத்தோட்டம் SSC விளையாட்டரங்கம் ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் இந்தப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும். 

இக்காலப்பகுதியில் குறித்த மைதானங்களில் நடைபெறும் போட்டிகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பெருந்திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அப்போட்டிகள் நடைபெறும் நாட்களுக்கு ஏற்றவாறு இதனை நடைமுறைப்படுத்தக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…