இலங்கை

தொடங்கொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் விசேட சோதனை

களுத்துறை, தொடங்கொட நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நேற்று (20) இரவு விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, குறித்த வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பிலும் தொடங்கொட பொலிஸார் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…