இலங்கை

முந்திச் செல்ல முயன்ற காரால் விபத்து: 3 வயது குழந்தை பலி


முந்திச் செல்ல முயன்ற காரால் விபத்து: 3 வயது குழந்தை பலி

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. 

இந்த விபத்து நேற்று (20) மதியம் ஏத்கால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பளை – நாவலப்பிட்டி வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏத்கால பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…