இலங்கை

மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது

இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் கடுமையான மின்னலுடன் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்காலிகமாக குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது

இந்நிலையில் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…