இலங்கை

லாப்ஸ்–லிட்ரோ அறிவிப்பு: சேவையில் புதிய மாற்றங்கள்

புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எல்பி எரிவாயு கையிருப்பு விநியோகம் இன்று (16.04.2026) முதல் மீண்டும் தொடங்கும் என எரிவாயு விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட முனையங்கள் வழியாக, கையிருப்பில் உள்ள 5000 மெட்ரிக் தொன் எரிவாயு இன்று சந்தையில் வெளியிடப்படும் என லாப்ஸ் கேஸ் பிஎல்சி (Laugfs Gas PLC) அறிவித்துள்ளது.

அத்துடன் லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனமும், தங்களது விநியோகப் பணிகள் இன்று முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என உறுதிப்படுத்தியுள்ளது.

நிறுவனம், நுகர்வோருக்கு சீரான விநியோகம் இருக்கும் என உறுதியளித்ததோடு, மே மாதம் வரை நீடிக்கும் அளவுக்கு போதுமான கையிருப்பு தற்போது உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, எல்பி எரிவாயு விநியோகம் தடையின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…