இலங்கை

மட்டக்களப்பில் தோட்டத்தில் காயமடைந்த நிலையில் சடலம்மீட்பு


மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளயாக் தோட்டமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று குறித்த சடலத்தை (19.04.2026) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது தோட்டத்தில் சனிக்கிழமை வரையும் வேலை செய்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த குறிதத நபரே இவ்வாறு ஞாயிற்றுக் கிழமை இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…