இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனப் பிரஜை ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 3 கோடி 44 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான 35 வயதுடைய சீனத் தொழிலதிபர் இலங்கைக்கு வருகை தரும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சீனாவில் இருந்து சிகரெட்டுகளை கொள்வனவு செய்து, தாய்லாந்தின் பேங்கொக் நகரிற்கு சென்று, அங்கிருந்து தாய் எயார்வேஸ் நிறுவனத்தின் TG-307 விமானம் மூலம் இன்று அதிகாலை 12.55 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த 13 பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 வகையான 229,800 சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையினை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…