இலங்கை

அதிரடி போதைப்பொருள் சோதனை: முக்கிய குற்றவாளி பிடிபட்டார்


ஹோமாகம, கட்டுவான பகுதியில் 20 கிராம் 830 மில்லிகிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹோமாகம, மகரகம மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நான்கு முச்சக்கர வண்டிகளை திருடிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

இதற்கமைய, திருடப்பட்ட நான்கு முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…