இலங்கை

 ‘சாகரிகா’ ரயில் மீண்டும் தடம் புரண்டது

‘சாகரிகா’ ரயில் நேற்று தடம் புரண்டிருந்த நிலையில் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது.

இன்று மாலை 06.20 அளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் மீண்டும் தடைப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையில் தற்போது ஒரு வழித்தடத்தில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை தடம் புரண்டிருந்த சாகரிகா ரயில், சீர்செய்யப்பட்டு மீண்டும் கொழும்பு நோக்கி வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

இதேவேளை, மீண்டும் தடம் புரண்டுள்ள சாகரிகா ரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தடைப்பட்டுள்ள கடற்கரை மார்க்க ரயில் பாதையை இன்றைய தினத்திற்குள்ளேயே மீண்டும் திறக்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…