No products in the cart.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
இலங்கையின் நிதி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளன.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், மோசடியான முறையில் வெளிநாட்டுக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சி வட்டாரங்களில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளது.
அதேவேளை, கிழக்கு மாகாண இராணுவத் தளபதியாகப் பணியாற்றி வந்த போது, மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாதுகாப்பு பிரதி அமைச்சராக உள்ள அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் இந்த இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கும் கையொப்பங்களைச் சேகரிக்க பணிகள் எதிர்க்கட்சிகள் ஆரம்பிக்க உள்ளன.
இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த இரண்டு புதிய நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவரும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.














