இலங்கை

சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்! ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல்

சிறுமி ஒருவரைக் கடத்தி, பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 12 ஆம் திகதி(12.05.2026) வரை அசரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமரத்ன தேரர், கடந்த 8 ஆம் திகதி  கைது செய்யப்பட்டார்.

இதன்படி சந்தேக நபரை மே 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (09.05.2026) உத்தரவிட்டார்.

15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் அதிதுமீறலுக்கு உள்ளாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமரத்ன தேரரைக் கைது செய்யுமாறு அனுராதபுர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை காவல்துறை முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.

மேலும், அந்தத் தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்திருந்தது.

காவல்துறையின் கூற்றுப்படி, சிறுமி கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2026 மார்ச் 06 அன்று நிட்டம்புவ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி விசாரணைகளின் போது, ​​பாதிக்கப்பட்டவர் தனக்கு முன்னொரு காலத்தில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, கம்பஹா பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நிட்டம்புவ காவல்துறை மற்றும் பெண்கள், சிறுவர் பணியகம் ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…