இலங்கை

உலக புகையிலை எதிர்ப்பு தேசிய தின நிகழ்வு நாளை

உலக புகையிலை எதிர்ப்பு தின விசேட நிகழ்வு நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது. 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை முற்பகல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

புகையிலை தொழில்துறையின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவோம், புகையிலை மற்றும் நிகோடின் தயாரிப்புகளுக்கு எதிராக நிற்போம்’ என்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாகும். 

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…