இலங்கை

கண்டியில் வீசியெறியப்பட்ட குப்பைகள்!

தலதா மாளிகையில் நடைபெற்ற புனித தந்த தாது தரிசனத்துக்காக வருகை தந்த யாத்திரிகர்கள், சுமார் 600 தொன் குப்பைகளை கண்டி நகருக்குள் வீசியெறிந்துள்ளனர்.

கண்டி மாநகர சபையின் திடப்பொருள் மேலாண்மைப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது கடந்த 18ம் திகதி தொடக்கம் நேற்று மாலை வரை நடைபெற்ற புனித தந்த தாது தரிசனத்திற்காக சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கண்டிக்கு வருகை தந்திருந்தனர்.

இவர்கள் சுமார் 600 தொன் எடையளவான பொலித்தீன் உறைகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை கண்டி நகருக்குள் வீசியெறிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவற்றில் சிறுநீர், மலம் நிரம்பிய பொலித்தீன் உறைகளும் காணப்படுவதாகவும், அவற்றை அப்புறப்படுத்துவதில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…