No products in the cart.
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடல் ஆமைகளுடன் படகொன்றில் நபர் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு ஆமைகளும், ஆமைகளைக் கரைக்குக் கொண்டு வரப் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.














