இலங்கை

08 தன்சல்கள் இடைநிறுத்தம்

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்களுக்குப் பின்னர் மேலும் 17 தன்சல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

வெசாக் போயா பண்டிகையை முன்னிட்டு நேற்று 12 ஆம் திகதி நாடு முழுவதும் பல தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன அனைத்து தன்சல்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.

இன்றைய தினமும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…