இலங்கை

ரம்பொடவில் மற்றுமொரு விபத்து

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது. 

கெரண்டிஎல்லவில் பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இருப்பினும், அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…