உலகம்

கனடாவுக்கு புலம்பெயர்ந்த இந்தியர் ஒருவர்மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

இந்தியாவிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜீத் சிங் (Harjit Singh Dhadda, 50), கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Mississauga நகரில் ட்ரக் சேவை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை தனது அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் அருகே சிங் நின்றுகொண்டிருக்கும்போது, அங்கு ஏற்கனவே கார் ஒன்றில் காத்திருந்த சிலர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள், அந்த நபர்கள் சிங்கை நோக்கி 15 முதல் 16 முறை சுட்டதாகவும், பின்னர் தாங்கள் வந்த காரிலேயே தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையில், சிங்குக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…