இலங்கை

மே மாதத்தில் 90 ஆயிரத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த வருடத்தின் மே மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 91,785 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்ட வாராந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் (India) இருந்து 31,635 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ள நிலையில் இது 34.5 சதவீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், மே மாதத்தில் இங்கிலாந்திலிருந்து (England) 6,195 பேரும், சீனாவிலிருந்து (China) 6,043 பேரும், ஜேர்மனியிலிருந்து (Germany) 5,526 பேரும், பங்களாதேஸ் நாட்டிலிருந்து 4,693 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, மே மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 988,669 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 188,694 பேர் இந்தியாவிலிருந்தும், 109,840 பேர் ரஷ்யாவிலிருந்தும், 93,248 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…