No products in the cart.
இரகசிய தகவலின் படி வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு!
வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோகிராம் கஞ்சாவினை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 10 கிலோகிராம் கஞ்சாவினை கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய ஒருவரை கைது செய்து ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.