இலங்கை

கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மகளிடம் விசாரணை!

கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மகளிடம் விசாரணை!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் இன்று (19) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் சிறை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும், பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…