இலங்கை

அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகள் இடையே நேற்று (20) பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்திலிருந்து உதவி வழங்கத் தயாராக இருப்பதாக யுனிசெஃப் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி Andreas Karpati, பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…