இலங்கை

பெண்ணாக நடித்து ஏமாற்றிய 37 வயது வழக்கறிஞர் கைது

இணையத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை விபச்சாரியாக காட்டிக்கொண்டு, பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் நிர்வாண புகைப்படங்களை தயாரித்து இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக சி.ஐ.டியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர் தொடர்பாக தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…