இலங்கை

பியல் மனம்பேரி மீண்டும் விளக்கமறியலில்

மித்தெனிய பிரதேசத்தில் ஐஸ்போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரி மற்றும் மின்சார சபையின் ஊழியர் ஆகியோருக்கான வழக்கு இன்று (29) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

காணொளித் தொழில்நுட்பம் ஊடாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. 

அதன் பின்னர், அவர்கள் இருவரையும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு உத்தரவிட்டார். 

மித்தெனிய, தலாவ பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டிருந்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…