No products in the cart.
“வலம்புரி சங்க உறுப்பினர் கைது: களுத்துறை டிப்போ அருகில் விசாரணை”
களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரி சங்குடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) மதியம் களுத்துறை பிராந்திய குற்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு 35 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் வலம்புரி சங்கும் மேலதிக விசாரணைக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














